சினி செய்திகள்

இயக்குநர், நடிகர், டாக்டர், போலீஸ் என, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் லிஸ்ட் இதோ… மலையாள நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு.!

னக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் என 14 பேர் பட்டியலை வெளியிட்டு, மலையாள நடிகை ரேவதி சம்பத் சமூக வலைத் தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்டவராக ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ரேவதி சம்பத், கோவையில் உள்ள கல்லூரியில் பயின்றவர். ஃபேஸ்புக் பக்கத்தில், தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேர் பட்டியலை  வெளியிட்டிருக்கிறார்.

“இவர்கள் தன்னை பாலியல் ரீதியாக, உளவியல்ரீதியாக, உணர்வுரீதியாக, துன்புறுத்தியவர்கள். இந்தக் குற்றவாளிகளின் லிஸ்ட் இதோ” என இயக்குநர், நடிகர், டாக்டர், ஃபோட்டோகிராஃபர், எஸ்ஐ என பல தரப்பைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ரேவதி சம்பத், இரண்டு வருடங்களுக்கு முன்பே நடிகர் சித்திக் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

நடிகர் அப்பாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா?

piragazh

2019-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகைகள்

piragazh

அப்பாவிடம் பொய் சொல்லிட்டு ஸ்ரீதேவி மகள் செய்த திருட்டுத்தனம் தெரியுமா?

piragazh